அய்யங்கார்குளம் ஊராட்சியில் வகுப்பறை கட்டடம் திறப்பு

69பார்த்தது
அய்யங்கார்குளம் ஊராட்சியில் வகுப்பறை கட்டடம் திறப்பு
காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 159 மாணவ- - மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, உத்திரமேரூர் தி. மு. க. , - எம். எல். ஏ. , சுந்தர், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்த 18. 83 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக கட்டப்பட்ட இரு வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது.

உத்திரமேரூர் தி. மு. க. , - எம். எல். ஏ. , சுந்தர், கூடுதல் வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்து, மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி