மதுராந்தகத்தில் மின் வயர் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

60பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஒழுப்பாக்கம் என்ற இடத்தில் திருச்சி To சென்னை, சென்னை To திருச்சி ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளின் குறுக்கே செல்லும் உயர் அழுத்த மின் வயர்கள் சாலையின் குறுக்கே சென்றது. மின்கம்பம் அருகே இருந்த பனைமரத்தின் மீது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்த காரணத்தால் பனை மரத்தில் இடி தாக்கியதில் பனைமரம் சிதறியது.

அதிர்வு காரணமாக அருகில் மின் கம்பத்தில் இருந்த வயர்கள் அனைத்தும் அறுந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை சரி செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேலானது. மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து மின் வயரை அகற்றி சாய்ந்து இருந்த கம்பத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி