திருக்கழுக்குன்றத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

74பார்த்தது
தமிழகத்தில் கோடை வெயில் இயல்பை விட நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காத்திடவும் பொது மக்களின் தாகம் தீர்த்திடவும் தமிழகம் முழுவதும் நீர் மோர் பந்தல் அமைத்திட தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அதனடிப்படையில் வெயிலின் தாக்கத்தை தணிக்க திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே காஞ்சி வடக்கு மாவட்ட திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா முன்னாள் எம்எல்ஏவும் திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளருமான வீ தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி வேட்பாளர் செல்வம் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொது மக்களுக்கும் பாதசாரிகளுக்கும் இளநீர் தர்பூசணி, வெள்ளரிக்காய் மோர் பண நுங்கு உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சி தரும் பொருட்களை வழங்கினார் நிகழ்ச்சியில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் திமுக தலைமை பொது குழு உறுப்பினர் செல்வகுமார் மாவட்ட கவுன்சிலர் ஆர்கே ரமேஷ் ஒன்றிய சேர்மன் ஆர் டி அரசு துணை சேர்மன் எஸ் ஏ பச்சையப்பன் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவர் கரியச்சேரி சேகர் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கிளைக் கழக நிர்வாகிகள் அனைத்து அணி சார்ந்த நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி