கேரளாவின் கொச்சி முளவுகாட் எல்லையில் நடந்த விபத்து காட்சிகள் வெளியாகியுள்ளன. ஒரு வாலிபர் பைக்கை வேகமாக ஒட்டி வந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அவர், சைக்கிளில் சாலையை கடக்கும் சிறுவன் மீது மோதினார். மேலும், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்னால் மோதினார். இந்த விபத்தில் பைக்கை ஓட்டி வந்த வாலிபர் பலத்த காயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.