ஊராட்சி மன்ற அலுவலகம் நான்கு வீடுகளில் கொள்ளை முயற்சி

75பார்த்தது
செங்கல்பட்டு அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் நான்கு வீடுகளில் கொள்ளை முயற்சி

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அடுத்த வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டு மற்றும் சிசிடிவி கேமராவை நள்ளிரவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள ரமேஷ் (45), நவின் (25), சாந்திமணி (39), பரசுராமன் (42) ஆகிய நான்கு பேருடைய வீட்டின் பின் பக்கம் மற்றும் முன் பக்க கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். வீட்டின் உமையாளர்கள் விழித்துக்கொண்டு சத்தம் போதால் திருட வந்த மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.

கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த பாலூர் போலீசார் வெங்கடாபுரம் ஊராட்சிக்கு விரைந்து சென்று கைரேகை நிபுனர்களின் உதவியுடன் மர்ம நபர்களின் தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர்.

ஒரே நாளில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் அடுத்தடுத்து நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் வெங்கடாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி