மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனு

84பார்த்தது
மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சூணாம்பேடு ஊராட்சிக்குட்பட்ட இல்லீடு கிராம தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இடங்களை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்வதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியரை
சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.

செங்கல்பட்டு மாவட்டம்
செய்யூர் வட்டம் சூனாம்பேடு ஊராட்சிக்குட்பட்ட இல்லீடூ கிராமத்தில் சுமார் 320 ஏக்கர் நிலத்தில்
தோட்டி மானியம், வண்ணான் மானியம் உள்ளிட்ட மானிய வகை நிலங்களை அளவீடு செய்து பயனாளிகளுக்கு வழங்குவதற்காக முழு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையில் நிலங்களை தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்து பட்டா பெறுவதற்கான முயற்சிகளை ஈடுபட்டு வருவதாக
100 - க்கும் ஏற்பட்ட கிராம மக்கள் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜனை சந்தித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி