காஞ்சிபுரம் அருகே உள்ள கீழ்அம்பி கிராமத்தில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 27வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் கோலாகலமாக நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் சென்னைப் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் டாக்டர். இளங்கோவன் வெள்ளைச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு, சுமார் 550க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.
முன்னதாக சென்னைப் பல்கலைக்கழக அளவில் முதுகலை உயிரி வேதியியல் துறையில் 8வது இடம் பிடித்த வி. ரெனிடா மினி, இளங்கலை இயற்பியல் துறையில் 9வது இடம் பிடித்த கே. பரமேஸ்வரி, இளங்கலை நுண்ணுயிரியல் துறையில் 10வது இடம் பிடித்த கே. கோபிகா, முதுகலைத் தமிழ் துறையில் 10வது இடம் பிடித்த கே. லாவண்யா ஆகிய மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கி சிறப்பித்தார். இதில் பட்டம் பெற்றவர்களுக்கு நிர்வாக இயக்குநர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிறைவாக கல்லூரி துணை முதல்வர் ம. பிரகாஷ் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் இதில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.