செங்கல்பட்டில் பெண் மருத்துவர் விபரீத முடிவு

57பார்த்தது
செங்கல்பட்டில் பெண் மருத்துவர் விபரீத முடிவு
திருவுடைமருதூர் அருகே பந்தலூர் பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவருடைய மகள் அப்சாரா (28). இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவராக பணியாற்றி வருகின்றார்.

மருத்துவமனையில் பெண் மருத்துவராக பணியாற்றி வரும் அப்சாரா செங்கல்பட்டு அண்ணாநகர் ஐந்தாவது தெருவில் தனது தந்தை கணேஷ், மற்றும் தாய் என மூன்று பேரும் வாடகை வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். மருத்துவர் அப்சாராவின் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊர் சென்றுள்ளனர். அப்சாராவின் தாய் பல முறை மகள் செல்போன் எண்ணுக்கு தொடர்புகொண்டுள்ளார். மகள் அப்சாரா செல்போன் எடுக்காததால் பக்கத்து வீட்டிற்க்கு தொடர்பு கொண்டு தனது மகளிடம் செல்போனை கொடுக்கும் படி அப்சாராவின் தாய் கேட்டுள்ளார். பக்கத்து வீட்டுக்காரர் அப்சாராவின் வீட்டிற்க்கு சென்று பார்க்கும் போது வீட்டின் உட்புறம் கதவு பூட்டப்பட்டிருந்தது செங்கல்பட்டு காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரியபடுத்தினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு நகர போலீசார் அண்ணாநகரில் வாடகை வீட்டில் இருந்த அப்சாரா வீட்டின் கதவை உடைக்கப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார். உடனே அப்சாரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி