பவன் கல்யாண் மீது போலீசில் புகார்

69பார்த்தது
பவன் கல்யாண் மீது போலீசில் புகார்
நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என்பவர் புகார் அளித்துள்ளார். லட்டு விவகாரத்தில் எந்த வித தொடர்பும் இல்லாத துணை முதல்வர் உதயநிதி குறித்து அவதூறாக பேசியதாக புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார். இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கும் வகையில் பேசிய பவன் கல்யாண் மீது வழக்குப் பதிய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி