தங்க கருட வாகனத்தில் காஞ்சி வரதர் வீதியுலா

82பார்த்தது
தங்க கருட வாகனத்தில் காஞ்சி வரதர் வீதியுலா
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி பிரமோற்சவத்தின் மூன்றாம் நாள் உற்சவத்தின்போது, கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.

இதேபோல, ஆனி, ஆடி மாதங்களில், வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் நடக்கிறது. அதன்படி ஆனி மாதத்திற்கான ஆனி கருடன் உற்சவம் நேற்று நடந்தது.

இதையொட்டி, நேற்று, மாலை 5: 30 மணிக்கு, பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து வாகன மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அலங்காரம் நடந்தது.

தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், ஆழ்வார் பிரகாரமாக வலம் வந்தார். தொடர்ந்து மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆனி கருடன் உற்சவத்தை தொடர்ந்து இரவு, பெரியாழ்வார் சாற்றுமுறை உற்சவம் நடந்தது.

தொடர்புடைய செய்தி