கிணற்றில் விழுந்த விவசாயிகளை மீட்ட தீயணைப்புத்துறையினர்

66பார்த்தது
உளுந்துார்பேட்டை அருகே கிணற்றில் விழுந்த மூன்று விவசாயிகளை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

உளுந்துார்பேட்டை தாலுகா பு. மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் 60, விவசாயி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன், 33; பைக்கில் உட்கார வைத்துக்கொண்டு உளுந்துார்பேட்டையில் இருந்து பு. மாம்பாக்கம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
நேற்று காலை 11 மணியளவில் பு. மாம்பாக்கம் வயல்வெளி பகுதி வழியாக சென்ற போது எதிரே மாடு குறுக்கே வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெய்சங்கர், பைக்கை இடது பக்கத்தில் போட்டுவிட்டு, வலது பக்கத்தில் இருந்த 40 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் குதித்தனர். அவருடன் சேர்ந்து வேல்முருகனும் குதித்தார். இருவரும் கிணற்றின் மேலே ஏற முடியாமல் தவித்தனர்.


இவர்களின் சத்தம் கேட்டு அருகில் இருந்து விவசாய ராஜ்குமார், 48; அவர்களை காப்பாற்ற கிணற்றில் குதித்தார். அவரும் கிணற்று மேலே ஏற முடியாமல் தவித்தார்.


மூவரும் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்த்வர்கள் ஓடிடந்து மூவரையும் மீட்க முயற்சித்தனர். பின் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் தவித்துக்கொண்டிருந்தவர்களை கயிறு கட்டி கிணற்றில் தவித்த ஜெய்சங்கர், வேல்முருகன், ராஜ்குமார் ஆகிய மூன்று பேரையும் கயிறு கட்டி மீட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி