அரசு பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கல்

67பார்த்தது
அரசு பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கல்
சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி திறந்த முதல் நாளிலேயே மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர்(பொ) ராமசாமி தலைமை தாங்கினார். பி. டி. ஓ. , தலைவர் கமருதீன் மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி