பெண்ணிடம் தகராறு செய்த நபர் கைது

64பார்த்தது
ரிஷிவந்தியம் அடுத்த காட்டுஎடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி மணிமேகலை, 40; இவர் கடந்த 31ம் தேதி மாலை 4: 30 மணியளவில் விளைநிலத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேர் மணிமேகலையிடம் தகராறு செய்து, திட்டினர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் இருவரையும் பிடிக்க முயன்றபோது ஒருவர் தப்பியோடினார். பிடிபட்ட நபரை போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், பிடிபட்ட நபர் எறையூரைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஆரோக்கியதாஸ், 22; தப்பி ஓடியவர் செல்லக்குட்டி மகன் ரட்சகநாதன் என்பது தெரிந்தது. தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிந்து, அதில் ஆரோக்கியதாசை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி