கொடைக்கானலில் கொட்டும் கனமழை

70பார்த்தது
கொடைக்கானலில் கொட்டும் கனமழை
கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான கொடைக்கானல், அதை சுற்றியுள்ள பகுதிகளில் இரு தினங்களாக மழை பெய்கிறது. இங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தாண்டிக்குடி, கே.சி பட்டி பகுதியில் கனமழைக்கு மரம் சாய்ந்து, அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் சிறிது நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது. மின்தடை ஏற்பட்டு மலை கிராமங்கள் இருளில் மூழ்கின. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.

தொடர்புடைய செய்தி