மது பாட்டில் விற்பனை செய்த முதியவர் கைது

58பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் முருக்கம்பாடி கிராமத்தில் நேற்று (ஜூன் 5)தீவிரரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வீட்டின் பின்புறம் மதுபாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த காந்தி(வயது 76) என்பவரை கைதுசெய்த போலீசார் அவரிடம் இருந்து 6 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி