முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்

66பார்த்தது
முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நேற்று(செப்.18) நடந்தது. கள்ளக்குறிச்சி தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சத்தியராஜ், மாவட்ட செய்தி தொடர்பாளர் சிவசுப்பிரமணியன் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

பின்னர் மாவட்டம் முழுவதும் இருந்து 1300 தபால்களை பெற்று அதை தபால் பெட்டியில் போட்டு
முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர், கூடுதல் தலைமை செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குனர் ஆகியோருக்கும் தபால் அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி