பயணிகள் நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை

60பார்த்தது
பயணிகள் நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை
கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள எம். ஆர். என். , நகர் பஸ் ஸ்டாப்பில் பொதுமக்கள் பலர் காத்திருந்து பஸ் ஏறிச் செல்கின்றனர். அதேபோல் கூலி வேலை செய்து விட்டு செல்லும் கிராமப்புற பெண்கள் உட்பட பலர் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், அங்குள்ள பயணிகள் நிழற்குடையில் சேர்கள் உடைந்து காணப்படுகிறது. பயணிகள் நிழற்குடையின் தரைதளமும் உடைந்து முற்றிலும் சேதடைந்து காணப்படுகிறது.
இதனால், நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் வெளியே வெயில் காத்திருந்து செல்கின்றனர். எனவே, பயணிகள் நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி