விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின், உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பின் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் அலுவலக உதவியாளர், எழுத்தாளர் மற்றும் பியூன் உள்ளிட்ட பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு, நேர்காணல் வரும் 22ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்த விரிவான தகவல்களை, https://viluppuram.dcourts.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த தகவலை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.