தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (மார்ச் 16) மதியம் 1 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருசில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.