பைக் மீது கார் மோதி விபத்து.. அந்தரத்தில் பறந்த நபர்

78பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சாமியார்மடம் பகுதியைச் சேர்ந்த பெஸ்கி என்பவர், முளகுமூடு பகுதியில் தனது ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிர் திசையில் வந்த கார் ஒன்று வேகமாக அவர் மீது மோதியது. இதில், பெஸ்கி தூக்கி வீசப்பட்ட நிலையில் அந்த கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில், காயமடைந்த பெஸ்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி