மக்களை விட மோடியின் ரோடு ஷோ முக்கியமா?

67பார்த்தது
மக்களை விட மோடியின் ரோடு ஷோ முக்கியமா?
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பிற்காக பிரதமர் மோடி ரோடு ஷோவில் பங்கேற்று வருகிறார். இதற்கு இன்று (மே 16) நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “மும்பை மகாராஷ்டிரத்தில் புழுதி புயல் ஏற்பட்டதன் காரணமாக பல்வேறு சேதாரங்கள் ஏற்பட்டு, 16 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கான நிவாரண பணிகள் தாமதிக்கப்பட்டு, மோடியின் ரோடு ஷோக்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவது கடும் கண்டனத்திற்கு உரியது. மக்களை விட மோடியின் ரோடு ஷோக்கள் முக்கியமாகிவிட்டதா?” என்றார்.

தொடர்புடைய செய்தி