நாட்டில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் (EVM) 1982ல் அறிமுகப்படுத்தப்பட்டது. கேரளா தேர்தலில் 50 வாக்குப்பதிவு மையங்களில் EVM பயன்படுத்தப்பட்ட நிலையில் சில குழப்பம் காரணமாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தல் நடக்க தொடங்கியது. பின்னர் EVM பயன்படுத்துவது தொடர்பாக உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்றன. 1992ல் நாடாளுமன்றத்தில் தேர்தல் விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டு பிரிவு 61ஏ சேர்க்கப்பட்டது. இதையடுத்து 1998 முதல் பரவலாக நாடு முழுவதும் EVM பயன்பாட்டுக்கு வந்தன.