மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டத்தை திமுக அரசு பதவியேற்ற பின், உயர்கல்வி உதவித் தொகை திட்டமாக மாற்றி இருந்தது. தமிழக அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த பெண்கள் உயர்கல்விகள் சேரும்பொழுது அவருடைய வங்கி கணக்கில் மாதம் ரூ.1000 செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்திருந்தார். இதன் மூலமாக சுமார் 2.73 லட்சம் மாணவிகள் பயனடைந்து வரும் நிலையில், இந்த ஆண்டு மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை 34 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.