திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்தவர் கலீல் அகமது. இவரது மனைவி சைரன் பானு (40). இந்தத் தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராமில் காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக அந்த இளைஞர் சிறுமியிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி நேற்று முன் தினம் (மே 30) வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.