கவிழ்ந்த படகு! பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் பலி

60பார்த்தது
கவிழ்ந்த படகு! பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் பலி
கிழக்கு ஆப்கானிஸ்தானில் நங்கர்ஹார் மாகாணத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் ஒரு ஆண், ஒரு பெண், 2 சிறுவர்கள் உட்பட 5 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. படகில் 25 பயணிகள் சென்றதாகவும், அதில் பெரும்பாலானோர் பெண்கள். குழந்தைகள் எனவும் தெரிகிறது. சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு மருத்துவக் குழுவும், ஆம்புலன்ஸ்களும் அனுப்பி வைக்கப்பட்டன. விபத்துக்கான காரணம் குறித்த விவரங்களை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

தொடர்புடைய செய்தி