சிறையில் இளைஞர் திடீர் மரணம் - குடும்பத்தினர் ஆவேசம்

564பார்த்தது
சிறையில் இளைஞர் திடீர் மரணம் - குடும்பத்தினர் ஆவேசம்
மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை போலீசார் கடந்த 3ஆம் தேதி வழிப்பறி வழக்கில் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். அங்கு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த கார்த்திக் நேற்று (ஏப்ரல் 5) காலை திடீரென உயிரிழந்தார். போலீசார் தாக்கியதன் காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி