திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெங்கலூரில் பரப்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட கால்வாயில் குளித்த 2 பெண்கள் மற்றும் 1 இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 3 பேரும் கால்வாயில் நேற்று (ஏப்ரல் 5) குளித்தபோது காணாமல் போன நிலையில் இன்று(ஏப்ரல் 6) அவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் உயிரிழந்தவர்களின் சடலங்களைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பள்ளி கல்லூரி நாட்கள் விடுமுறைகளில் மாணவர்கள் வாய்க்காலில் குளிக்க வேண்டாம் என்றும் எச்சகரித்துள்ளனர்.