முத்தலாக் கூறிய கணவர் கைது

66பார்த்தது
முத்தலாக் கூறிய கணவர் கைது
உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ஓடும் ரயிலில், கூடுதல் வரதட்சணை தரவில்லை என்பதால் தன் மனைவிக்கு கணவர் முத்தலாக் கூறியுள்ளார். தொடர்ந்து, மனைவியை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் நீதி கேட்டு சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார். தொடர்ந்து, அவரது கணவரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முத்தலாக் கிரிமினல் குற்றமாக மத்திய அரசு சட்டம் பிறப்பித்த பிறகும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி