பழம் பெரும் நடிகை CID சகுந்தலா காலமானார்.!

60பார்த்தது
பழம் பெரும் நடிகை CID சகுந்தலா காலமானார்.!
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா (84) பெங்களூருவில் காலமானார். சேலத்தில் பிறந்து வளர்ந்த சகுந்தலா சென்னையில் லலிதா, பத்மினி, ராகினி நடத்தி வந்த நடனப்பள்ளியில் நடனம் பயின்றார். அப்போது கிடைத்த அறிமுகத்தின் காரணமாக அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1970-ம் ஆண்டு வெளியான ‘CID சங்கர்’ படத்தில் நடித்தது மூலமாக CID சகுந்தலா என அறியப்பட்டார். சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று (செப்.18) காலமானார்.

தொடர்புடைய செய்தி