தமிழ்நாடு பேருந்து பயணிகளுக்கு நற்செய்தி

47701பார்த்தது
தமிழ்நாடு பேருந்து பயணிகளுக்கு நற்செய்தி
சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வண்டலூரையடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் அங்கிருந்துதான் செல்லவேண்டும் என்ற அறிவிப்பிற்கு எதிர்ப்பு கிளம்பி வந்தது. இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணையில், தற்காலிகமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகே உள்ள ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பணிமனைகளிலிருந்து பயணிகளை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம் என்று நீதிபதி அனுமதி அளித்தார். மேலும் கிளாம்பாக்கத்தில் இருந்தும் பயணிகளை ஏற்றி செல்லவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி