தேர்தலில் வெடித்த வன்முறை - துப்பாக்கிச்சூடு

74பார்த்தது
தேர்தலில் வெடித்த வன்முறை - துப்பாக்கிச்சூடு
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள ஷங்கலா பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தி வாகனங்களுக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலவரக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் பாதுகாப்புப் படை விரட்டியடித்தது. முன்னாள் பிரதமர்களான நவாஸ் ஷெரிப், இம்ரான் கான் ஆகியோர் தங்களது கட்சி வெற்றி பெற்றதாக அறிவித்ததால் நடந்த குழப்பம்தான் இந்த வன்முறைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வன்முறையில் இரண்டு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி