மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தீபக் படேல் (25), அக்ஷய் சென் (19) மற்றும் ஷியாம் பட்டாய். இவர்கள் மூவரும் சேர்ந்து 13 வயது சிறுமியுடன் நட்பாக பழகி, கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதனால், அவருக்கு கடுமையான ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறுமி சுயநினைவை இழந்து உயிரிழந்தார். பின்னர், சிறுமியின் சடலத்தை மூவரும் சேர்ந்து ஆற்றில் வீசியுள்ளனர். இச்சம்பம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகள் மூவரையும் கைது செய்துள்ளனர்.