சிறுமி சீரழிக்கப்பட்டு வீடியோ பதிவு: குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

57பார்த்தது
சிறுமி சீரழிக்கப்பட்டு வீடியோ பதிவு: குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த 2023 மார்ச் மாதம் ஜீவா (25) என்ற இளைஞர் சவுக்கு தோப்புக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததோடு வீடியோவும் எடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஜீவாவை கைது செய்தனர். அவர் மீது கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற வந்த நிலையில் நேற்று (ஜூன் 24) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, ஜீவாவுக்கு 20 ஆண்டுகள் சிறையும், ரூ. 70 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.7 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்தி