அதிமுக ஆட்சியிலும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டது: திண்டுக்கல் சீனிவாசன்

75பார்த்தது
அதிமுக ஆட்சியிலும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டது: திண்டுக்கல் சீனிவாசன்
அதிமுக ஆட்சி காலத்திலும் கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்பட்டது என, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு எதிராக திண்டுக்கல்லில் நேற்று அதிமுகவினர் நடத்திய போராட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் சிறுமலையைப் போலவே, கள்ளக்குறிச்சியில் கல்வராயன் மலை அமைந்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நான் வனத்துறை அமைச்சராக இருந்தபோது, நான் அந்த மலைக்கு போனேன். அங்கு எங்கு பார்த்தாலும் அடுப்பு எரிந்தது. உடன் வந்தவர்களிடம் என்னவென்று கேட்டேன். அவர்கள் சாராயம் காய்ச்சி விற்பதாக சொன்னார்கள் என்றார். இவரின் இந்த பேச்சால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அதிமுக காலத்திலேயே கள்ளச்சாராயம் காய்ச்சுவது புழக்கத்தில் இருந்துள்ளதா என அதிருப்தி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி