ஒருதலைப்பட்ச காதல் நிராகரிக்கப்படும் போது மனச்சோர்வு ஏற்படுகிறது. மேலும் அந்த விஷயத்தை பற்றி சிந்தித்து கொண்டே இருக்கும் போது அது மன அழுத்தமாக மாறுகிறது. இது பயம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கிறது. அதே சமயம் காதலை சொல்லி அது நிராகரிக்கப்பட்டால் அவர்களின் எதிர்காலத்தை பற்றி யோசித்து பதட்டமாகின்றனர். ஒருதலைப்பட்ச காதல் உங்கள் சுயமரியாதையையும் கெடுக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ஆணோ பெண்ணோ தங்களை குறைவாக மதிப்பிடத் தொடங்குகிறார்கள். மேலும் எதிர்மறை உணர்வுகள் உருவாகின்றன. சில சமயங்களில் சரி மற்றும் தவறுகளை வேறுபடுத்திப் பார்க்க முடியாமல் ஆபத்தான சூழ்நிலைகளில் மாட்டிக்கொள்கின்றனர்.