சார்ஜ் போட முயன்ற மாணவி மின்சாரம் தாக்கி பலி

54பார்த்தது
சார்ஜ் போட முயன்ற மாணவி மின்சாரம் தாக்கி பலி
பெரம்பலூர் அருகே மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள அண்ணாநகரில் வசித்துவரும் சின்னசாமி, பவளக்கொடி தம்பதிக்கு ஹரிதா ஸ்ரீ, நிகிதா ஸ்ரீ என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தாய் தந்தை இருவரும் வேலைக்கு சென்ற நிலையில், 5ஆம் வகுப்பு படிக்கும் நிகிதா ஸ்ரீ உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். வேலைக்கு சென்ற பெற்றோர் திரும்பி வந்து பார்த்தபோது நிகிதா உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். பின்னர் போலீசார் வந்து உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில் வீட்டில் இருந்த ப்ளக் பாயிண்ட்டில் செல்போனுக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி