கிறிஸ்தவர்கள் புனித பயணம் செல்ல நிதி - அரசு அறிவிப்பு

60பார்த்தது
கிறிஸ்தவர்கள் புனித பயணம் செல்ல நிதி - அரசு அறிவிப்பு
கிறிஸ்தவர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இப்புனிதப் பயணம் பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மதத்தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி