ராஜீவ் காந்தி நினைவு தினம்: உறுதிமொழி எடுத்த காங்கிரஸார்

77பார்த்தது
ராஜீவ் காந்தி நினைவு தினம்: உறுதிமொழி எடுத்த காங்கிரஸார்
இன்று (மே 21) முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் முருகன் கோயில் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம்.சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். முடிவில் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்தி