தேர்தல் பத்திரம் மூலம் அடித்த கொள்ளையை மறக்கடிக்கவே பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், நாட்டை ஆளும் பிரதமர் மோடி தனக்கு கல்யாணம் ஆனதை மறைத்து பொய் சொல்லி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தவர். நாடாளுமன்றத்தில் ஏற்கப்படாத குடியுரிமை சட்டத்தை தற்போது அமல்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் என்று சாடினார்.