80 வயதிற்கு மேற்பட்டவர்களும் ரேஷன் கடைகளில் நேரில் சென்று பொருட்களை பெற வேண்டும் என உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், தற்போது இதற்கு மறுப்பு தெரிவித்து உணவுத்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “80 வயதிற்கு மேற்பட்டவர்களை ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்து பொருட்களை வாங்க வேண்டும் என வற்புறுத்தக்கூடாது. இதனை மீறும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, இது குறித்து பொதுமக்கள் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்” என உணவுத்துறை எச்சரித்துள்ளது.