கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயக்க உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மீனவர் பிரச்சனைக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண வேண்டியது அவசியம் என பேசிய
பிரதமர் மோடி, இலங்கை கைது செய்துள்ள மீனவர்களை, அவர்களது படகுகளோடு விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.