இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‘மித்ர விபூஷணா’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கு பின்னர் அவர் பேசுகையில், “இலங்கைக்கு கொடுக்கப்பட்ட கடன்களுக்கான வட்டி குறைக்கப்படும். இலங்கை வாழ் தமிழர்களுக்கு 10,000 வீடுகள் கட்டித்தரப்படும். தமிழ் மக்கள் கோரிக்கையை இலங்கை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்" என்றார். தமிழக மீனவர்கள் பற்றி தனியாக அவர் பேசவில்லை.