மக்களின் வறுமையை மூலதனமாக்கும் பட்டாசு ஆலைகள்

65பார்த்தது
மக்களின் வறுமையை மூலதனமாக்கும் பட்டாசு ஆலைகள்
விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களது வயிற்றுப் பிழைப்புகளுக்கு பட்டாசு ஆலைகளையே நம்பி இருக்கின்றனர். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பார்க்க நினைக்கும் ஆலை உரிமையாளர்கள், எந்தவொரு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் ஆலையை நடத்தி வருகின்றனர். நாம் தீபாவளி அன்று ஒரு நாள் வெடிக்கும் பட்டாசுக்காக ஒரு வருடம் முழுவதும் இந்த மக்கள் உழைப்பை கொடுக்கின்றனர். நம்முடைய ஒரு நாள் மகிழ்ச்சியானது, குறைந்த கூலியில் பலருடைய உழைப்பும், பல உயிர் தியாகங்களும் நிறைந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி