கேரள ஆளுநர் துண்டில் பற்றிய தீ (வீடியோ)

79பார்த்தது
கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள சபரி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவில் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கலந்து கொண்டார். அப்போது ஆரிஃப் முகமது கான், மகாத்மா காந்தி புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய போது, அருகில் இருந்த விளக்கில் அவர் துண்டு பட்டு தீப்பிடித்தது. இதை உடனடியாக கவனித்த அதிகாரிகள் தீயை அணைத்தனர். இச்சம்பத்தால் அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

நன்றி: மனோரமா நியூஸ்

தொடர்புடைய செய்தி