மத்திய டெல்லியின் படேல் நகர் ரயில் நிலையத்தில் இன்று ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சிர்சா எக்ஸ்பிரஸ் பிளாட்ஃபார்ம் 3 இல் நின்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக ரயில்வே அதிகாரிகள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து ஏற்பட்ட போது ரயிலில் பயணிகள் யாரும் இல்லை. இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.