மகளை கர்ப்பமாக்கிய தந்தை.. 104 ஆண்டுகள் சிறை

10057பார்த்தது
மகளை கர்ப்பமாக்கிய தந்தை.. 104 ஆண்டுகள் சிறை
கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் 41 வயது தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 17 வயது பெண் உட்பட 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 17 வயது மகளுக்கு வயிறு வலி என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விசாரணையில் சிறுமியை அவரது தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. கடந்த 7 ஆண்டுகளாக சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து தந்தையை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சிறுமியின் தந்தைக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 104 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி