கோவை மாவட்டம், சூலூர் அருகே போகம்பட்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர், தனது மகள் தமிழ்செல்வி (15) மற்றும் தனது அண்ணன் மகள் புவனா (13) ஆகியோருக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க நேற்று (மே 26) வீட்டிற்கு அருகில் உள்ள குட்டைக்கு அழைத்து சென்றுள்ளார். குட்டையில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு தமிழ்செல்வியும் புவனாவும் சென்று தத்தளித்துள்ளனர். அவர்களை காப்பாற்ற சென்ற மணிகண்டன் சேற்றில் மாட்டி அவர்களுடன் சேர்ந்து நீரில் மூழ்கியதில் 3 பேரும் உயிரிழந்தனர். பின்னர் மணிகண்டனின் மனைவி அளித்த தகவலின் பேரில் அவர்களது உடலை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.