சென்னிமலையில் நடு ரோட்டில் பழுதாகி நின்ற அரசு டவுன் பஸ்.

2628பார்த்தது
சென்னிமலையில் நடு ரோட்டில் பழுதாகி நின்ற அரசு டவுன் பஸ்.
சென்னிமலை பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 12. 30 மணி அளவில் ஒரு அரசு டவுன் பஸ் திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூருக்கு புறப்பட்டு சென்றது. இந்த பஸ் சென்னிமலை பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சுமார் அரை கிலோமீட்டர் சென்று கொண்டிருந்தபோது திடீரென பஸ்ஸின் இஞ்சினில் கோளாறு ஏற்பட்டதால் நடுவழியில் நின்றுவிட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். அப்போது பஸ்ஸில் குறைவான பயணிகளே இருந்ததால் மீண்டும் நடந்து பஸ் நிலையத்துக்கு சென்று விட்டனர்.

ஆனால் வயதான ஒரு பெண்மணி மட்டும் நான் ஊருக்கு செல்ல வேண்டும் என பஸ்ஸில் இருந்து இறங்க மறுத்தார். அப்போது டிரைவரும், கண்டக்டரும் அந்த பெண்ணிடம் சமாதானம் பேசி பஸ்ஸில் இருந்து கீழே இறக்கி விட்டனர். பின்னர் பஸ் பழுது பார்க்கப்பட்டு சுமார் 3 மணி நேரம் கழித்து அங்கிருந்து பஸ் புறப்பட்டு சென்றது.

தொடர்புடைய செய்தி