YSR - ஜனசேனா கட்சியினர் நடுரோட்டில் ஆக்ரோஷ மோதல்

60பார்த்தது
YSR - ஜனசேனா கட்சியினர் நடுரோட்டில் ஆக்ரோஷ மோதல்
ஆந்திராவில் வரும் 13ம்தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. மாநிலத்தில் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனி அணியாகவும், தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக ஒரு அணியாகவும், காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன. இதனால் மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில், திருப்பதி தொகுதிக்குட்பட்ட கிரிபுரத்தில் வேட்பாளர் ஆரணி ஸ்ரீனிவாசலுவுடன் ஜனசேனா மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரித்தனர். அதேபகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரும் வாக்கு சேகரிக்க வந்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் மோசமாக தாக்கிக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி