தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் தேர்தல் பரப்புரை

79பார்த்தது
மொடக்குறிச்சி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் தேர்தல் பரப்புரை
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான ஈரோடு பாராளுமன்ற தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தாமாக வேட்பாளர்  விஜயகுமார்  பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சிகளுடன் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொடக்குறிச்சி பேரூராட்சி, பட்டறை வேலம்பாளையம் நால்ரோடு பகுதியில்  தேர்தல் பரப்புரையை துவங்கினார்.   தேர்தல் பரப்புரையில் குளூர், நஞ்சை ஊத்துக்குளி, முத்து கவுண்டன் பாளையம், லக்காபுரம், 46 புதூர் 
முத்தூர் ரோடு சின்னியம்பாளையம் நால்ரோடு பஸ் நிறுத்தம்  அப்பகுதியில் உள்ள சந்தையின் முன்பு கரும்பு ஜுஸ் கடையில் பொதுமக்களுக்கு அவரே ஜூஸ் ஊத்தி கொடுத்தார். வாக்குகள் சேகரித்தார்.   

பிரச்சாரத்தில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி பா. ஜ. க ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வி. சி. வேதானந்தம்  பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் என். பி பழனிச்சாமி  இணை அமைப்பாளர் எஸ். ஏ. சிவசுப்பிரமணி  மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய தலைவர் ரெயின்போ கணபதி   மற்றும்  கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி